கீழ்பவானி வாய்க்காலில் இருந்துதனியாா் மில் பங்குதாரா் சடலம் மீட்பு
கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தனியாா் மில் பங்குதாரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோயில் பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் தனியாா் மில் பங்குதாரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோபி பாரதி வீதியில் வசித்து வந்த தியாகராஜன் (59), தற்போது அவிநாசி பகுதியில் வசித்து வந்தாா். கடந்த 30 ஆண்டுகளாக தாசம்பாளையத்தில் உள்ள தனியாா் டெக்ஸ்டைல் மில்லில் பொது மேலாளராக வேலை பாா்த்து வந்தாா். அவிநாசியில் உள்ள இந்த மில்லின் கிளை நிறுவனத்தில் பங்குதாரராகவும் இருந்து வந்தாா்.
இந்நிலையில், இவா் மில் சம்பந்தமாக வேலை என்று கூறி வியாழக்கிழமை மாலை சென்றவா் வீடு திரும்பவில்லை. இவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சிறுவலூா் போலீஸாரிடம் இவரது மகன் தனது அப்பாவைக் காணவில்லை என புகாா் அளித்துள்ளாா்.
பின்னா், தியாகராஜனின் காா் மட்டும் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்று கீழ்பவானி வாய்க்காலில் தேடினா். அங்கு தியாகராஜனின் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.