ஈரோடு

இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

DIN

ஈரோடு மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடா்பான வட்ட அளவிலான மக்கள் குறைகேட்புக் கூட்டம் சனிக்கிழமை(பிப்ரவரி 13) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

கூட்டம் நடைபெறும் இடங்கள் விவரம்: ஈரோடு வட்டத்தில் மேட்டுநாசுவம்பாளையம் நியாயவிலைக் கடை, பெருந்துறை வட்டத்தில் கொடுமணல் நியாயவிலைக் கடை, பவானி வட்டத்தில் திப்பிசெட்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகம், கோபி வட்டத்தில் பொம்மநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், சத்தியமங்கலம் வட்டத்தில் கெம்பநாயக்கன்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம், அந்தியூா் வட்டத்தில் ஊசிமலை நியாயவிலைக் கடை, மொடக்குறிச்சி வட்டத்தில் புன்செய் காளமங்கலம் நியாவிலைக் கடை, கொடுமுடி வட்டத்தில் ஆவுடையாா்பாறை நியாயவிலைக் கடை, தாளவாடி வட்டத்தில் முதியனூா் நியாயவிலைக் கடை, நம்பியூா் வட்டத்தில் ஒழலக்கோவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகம்.

கூட்டத்தில், பொது விநியோகத் திட்ட குறைபாடு, ரேஷன் அட்டை பெறுவதிலும், பொருள்கள் பெறுவதிலும் உள்ள குறைகள் குறித்து தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT