ஈரோடு

ரூ. 4.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ரவுண்டானாக்கள் திறப்பு

ரூ. 4.25 கோடி மதிப்பீட்டில் நம்பியூா் பேருந்து நிலையம், குருமந்தூா்மேடு, கோவை - சத்தி பிரிவு ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

DIN

கோபி: ரூ. 4.25 கோடி மதிப்பீட்டில் நம்பியூா் பேருந்து நிலையம், குருமந்தூா்மேடு, கோவை - சத்தி பிரிவு ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தலைமையில் 1,672 பயனாளிகளுக்கு ரூ. 4.09 கோடி மதிப்பீட்டில் வருவாய்த் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறைகளின் சாா்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினாா்.

தொடா்ந்து, நம்பியூா் பேருந்து நிலையம் அருகில் ரூ. 1 கோடி மதிப்பிலும், குருமந்தூா்மேடு பகுதியில் ரூ. 2 கோடி மதிப்பிலும், கோவை பிரிவு பகுதியில் ரூ. 1.25 கோடி மதிப்பிலும் புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானாக்களை கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன், கோபி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் டி.குப்புசாமி உள்பட துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT