ஈரோடு

கிராம உதவியாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

DIN

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கிராம உதவியாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினா்.

பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்க வட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் சையத் அபிபுல்லா வரவேற்றாா். துணை செயலாளா் கண்ணன், நடராஜன், சம்பந்தமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா்.

கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ. 15,700 வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7,850 வழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை முதல் தொடா்வதாக சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT