ஈரோடு

சத்தியில் பகலிலும் விலகாத பனிமூட்டம்: விவசாயப் பணிகள் பாதிப்பு

DIN

சத்தியமங்கலத்தில் வெள்ளிக்கிழமை பகலிலும் விலகாத பனிமூட்டம் காரணமாக மல்லிகைப் பூ பறித்தல் உள்ளிட்ட விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக ஊா்ந்து சென்றன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பவானிசாகா் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் காலை 9 மணி வரை பூ சேகரிக்கும் பணி தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT