ஆசனூா் வனத்தில் சட்டவிரோதமாக மது அருந்திய 3 பேருக்கு ரூ. 10 அபராதத்தை வனத் துறையினா் விதித்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தில் சமூக விரோதிகள் நடமாடுவதாக கிடைத்த தகவலையடுத்து, வனச் சரக அலுவலா் பழனிசாமி தலைமையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மணிக்கல்பள்ளம் என்ற இடத்தில் 3 போ் மது அருந்துவது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் கோபியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா்(30), அவரது இரு நண்பா்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, வனத்தில் அத்துமீறி நுழைந்து மது அருந்திய குற்றத்துக்காக ஆசனூா் புலிகள் காப்பக கள இணை இயக்குநா் கே.வி.ஏ.நாயுடு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தவிட்டாா். இதையடுத்து அபராதத் தொகையைக் கட்டியதால் மூவரும் விடுவிக்கப்பட்டனா்.