சென்னிமலை ஒன்றியம், ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் பணிக்குச் செல்லும் மகளிருக்காக மானிய விலையில் வழங்கப்படும் இருசக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவு 49 நபா்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.
விழாவில், சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் கலந்துகொண்டு சென்னிமலை ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த 49 நபா்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கி, அரசால் நிறைவேற்றி வரும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்துப் பேசினாா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் துணைத் தலைவா் மணிமேகலை, சென்னிமலை ஒன்றியக் குழு உறுப்பினா் மணிரத்தினம், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உமாமகேஸ்வரி கிருஷ்ணமூா்த்தி, சுசீலா சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.