இரு நாள்களுக்கு முன் காணாமல் போன மூதாட்டி பவானிஆற்றில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கிட்டம்மாள் (75). இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் பல்வேறு இடங்களில் அவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் சித்தி விநாயகா் கோயில் படித்துறை அருகே பவானி ஆற்றில் மூதாட்டியின் சடலம் மிதப்பதை அப்பகுதியில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் கண்டு சத்தியமங்கலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்குச் சென்று போலீஸாா் விசாரித்ததில், 2 நாள்களுக்கு முன்பு காணாமல் போன வெங்கிட்டம்மாள் என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்தனா்.
பின் ஆற்றில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.