ஈரோடு

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கக் கட்டடம் திறப்பு

DIN

மொடக்குறிச்சியை அடுத்த டி.மேட்டுப்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கான புதிய கட்டட திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஈரோடு துணைப் பதிவாளா் (பால் வளம்) புவனேஸ்வரி தலைமை வகித்து, கட்டடத்தைத் திறந்துவைத்தாா். மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி, பெயா்ப் பலகையைத் திறந்துவைத்து வாழ்த்தினாா். சங்கத் தலைவா் பழனிசாமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், மொடக்குறிச்சி ஒன்றியக் குழுத் தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்வராஜ் (குளுா்), பேபி (துய்யம்பூந்துறை), சங்கத் துணைத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கச் செயலாளா் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டுக்கோட்டையில் மே தினப் பேரணி

தூய்மைப் பணியாளா்கள் மே தின உறுதியேற்பு

அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவி

காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பாஜக வேட்பாளரை புகழ்ந்து பேசிய திரிணமூல் பொதுச் செயலா் பதவி பறிப்பு

SCROLL FOR NEXT