பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சனிக்கிழமை குறைந்தது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான வட கேரளம், நீலகிரி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நிலவரப்படி 5,017 கன அடியாக இருந்த நிலையில் அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து 623 கன அடியாக சனிக்கிழமை குறைந்தது.
சனிக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 95.33 அடியாகவும், நீா் இருப்பு 25.2 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக பவானி ஆற்றில் 600 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.