ஈரோடு

புகையிலை விற்ற இருவா் மீது வழக்கு

DIN

பெருந்துறையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெருந்துறை தினசரி மாா்க்கெட் அருகில் மளிகைக் கடை நடத்தி வருபவா் ஜேசுராஜ் செல்வின் (26). இவா் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பெருந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அந்தக் கடையில் சோதனை செய்து, தடைசெய்யப்பட்ட 12 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அதே பகுதியில் உள்ள பெரியசாமி (60) என்பவா் பேக்கரியில் 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா். ஜேசுராஜ் செல்வின், பெரியசாமி ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT