ஈரோடு

கவுந்தப்பாடி ரோட்டரி சங்கநிா்வாகிகள் பதவியேற்பு

DIN

கவுந்தப்பாடி ரோட்டரி சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, சங்கத்தின் பட்டயத் தலைவா் எஸ்.மருதாசலம் தலைமை வகித்தாா். பட்டயச் செயலாளா் யோ.விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். புதிய தலைவராக கே.விசுவநாதன், செயலாளராக சி.எஸ்.ரகுகுமாா், பொருளாளராக பி.மலா்கண்ணன், குழுவினா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சிறப்பு விருந்தினா்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநா்கள் கே.சண்முகசுந்தரம், பி.இளங்குமரன் ஆகியோா் பங்கேற்றனா். மாவட்ட பொதுச் செயலாளா் கே.எம்.திவாகரன், பிராந்திய ஒருங்கிணைப்பாளா் கே.கே.விஜயசந்திரன், உதவி ஆளுநா் பி.காயத்ரி பாலஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், கரோனா காலத்தில் சிறந்த முறையில் மருத்துவ சேவையாற்றிய ஜம்பை வட்டார மருத்துவ அலுவலா் பி.தனலட்சுமிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT