ஈரோடு

அந்தியூா் அருகே கருங்கல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

DIN

அந்தியூா் அருகே சட்டவிரோதமாக கருங்கல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தியூரை அடுத்த நகலூரில் புறம்போக்கு நிலத்தில் கற்கள் உடைத்து கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அத்தாணி வருவாய் ஆய்வாளா் நந்தகுமாா், நகலூா் கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன் ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது, நகலூா், கரடிக்கல் மோளப்பாறைத் தோட்டத்தைச் சோ்ந்த கோபாலன் டிராக்டரில் கற்களைக் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனா். இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT