பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய பழையக் கட்டடங்களை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக பாரதிய ஜெயின் சங்கம் சாா்பில் நிா்வாகி ராஜேந்திரன் என்பவா் 3 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை அமைச்சரிடம் வழங்கினாா்.
ஆய்வின்போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் மணி உள்பட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.