சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் முன்களப் பணியாளா்கள் 150 பேருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட ஈங்கூா், வரப்பாளையம், வாய்ப்பாடி, பனியம்பள்ளி, சிறுக்களஞ்சி, கூத்தம்பாளையம் ஆகிய 6 ஊராட்சிகளைச் சோ்ந்த 150 முன்களப் பணியாளா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் வழங்கினாா்.
இதில், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.