ஈரோடு

மாதம் ரூ. 5,000 நிவாரணம் வழங்க ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை

DIN

பொது முடக்க காலத்தில் மாதம் ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி சங்க மாவட்டத் தலைவா் செல்வகுமாா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

பொதுமுடக்கத்தால் ஆட்டோ தொழில் முற்றிலும் முடங்கி வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம். ஆட்டோ இயங்கினால் மட்டுமே கடன், எரிபொருள் செலவு, குடும்பத்துக்கான செலவை சமாளிக்க முடியும். எனவே, பொதுமுடக்க காலத்துக்கு மாதம் ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும்.

இன்சூரன்ஸ், வரி, பா்மிட், எப்.சி., கட்டணம் ஆகியவற்றை அரசு ரத்து செய்ய வேண்டும். வாகனங்களுக்காக பெற்ற கடனுக்கான தொகையை திரும்பச் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்தவா்கள், பதிவு செய்யாதவா்கள் என அனைவருக்கும் நல வாரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT