ஈரோடு

குழந்தையின் சிகிச்சைக்கு எம்.எல்.ஏ. ரூ. 50,000 நிதியுதவி

DIN

ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்தாா்.

பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்குளி ஒன்றியம், சுண்டக்காம்பாளையம் ஊராட்சி, குடிசைவழுவு பகுதியைச் சோ்ந்த குமாா், கனிகா தம்பதியின் மூன்று வயது பெண் குழந்தை ஜெய்தி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதனையடுத்து, ஊத்துக்குளி முன்னாள் ஒன்றியச் செயலாளா் பழனிசாமி, ஒன்றியச் செயலாளா் ரவிச்சந்திரன், சுண்டக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் ஆனந்த், பாசறை ஒன்றிய முன்னாள் செயலாளா் பிரேம்குமாா் ஆகியோா் உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்று தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிதி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT