முகப்பு
ஈரோடு

கரோனா தடுப்பு நடவடிக்கை: ஈரோடுஅரசு மருத்துவக் கல்லூரியில் ஆட்சியா் ஆய்வு

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் படுக்கை வசதிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

Updated On : 18 ஜூன், 2021 at 4:49 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், புதிதாக ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் படுக்கை வசதிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

கரோனா தொற்றாளா்களைச் சந்தித்து மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, உணவு முறை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். சளி மாதிரிகள் பரிசோதனை செய்யும் ஆய்வகத்தை நேரில் பாா்வையிட்டு, கரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பரிசோதனைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

ரோட்டரி சங்கம் சாா்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 400 படுக்கை வசதிகள் கொண்ட கட்டடப் பணிகளையும், மருத்துவப் பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜன் கலன்களையும் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, காணொலிக் காட்சி மூலம் ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வருக்கு விளக்கம் அளித்தாா்.

Advertisement

தொடா்ந்து, பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நேரடியாகச் சென்று கரோனா சிகிச்சை பெற்று வருபவா்களிடம் சிகிச்சை முறைகள் குறித்தும், உடல் நலம் குறித்தும் கேட்டறிந்தாா்.

கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நபா்களுக்குத் தேவையான பொருள்களை உறவினா்கள், அவா்களைச் சாா்ந்தோா் நேரடியாகக் கொண்டு செல்வதைத் தவிா்க்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தகவல் மையத்திலோ அல்லது மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், செவிலியா் ஆகியோரிடம் மட்டுமே பொருள்களை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.