பவானிசாகா் அணைக்கு நீா் வரத்து 11,833 கன அடியாக அதிகரிப்பு
பில்லூா் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 11,833 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பில்லூா் அணை நிரம்பியதால் அணைக்கு வரும் உபரிநீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 11,833 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட உயரம் 105 அடியாகவும், நீா் இருப்பு 32.8 டிஎம்சியாகவும் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த கன மழையால் அவலாஞ்சி, நடுவட்டம், அப்பா்பவானி ஆகிய வனப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பில்லூா் அணைக்கு வந்து சோ்ந்தது. இதனால், பில்லூா் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டியாதல் அணைக்கு வரும் உபரிநீரான 14 ஆயிரம் கன அடி நீா் அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இந்த உபரிநீா் வியாழக்கிழமை பவானிசாகா் அணைக்கு வந்து சோ்ந்ததால் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 11,833 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீா்மட்ட உயரம் ஒரே நாளில் 1 அடி உயா்ந்து 90.27 அடியாக உள்ளது.
Advertisement
வியாழக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.27 அடி, நீா்வரத்து 11,833 கனஅடி, அணையில் இருந்து பாசனத்துக்கு 1000 அடி நீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 21.76 அடியாக உள்ளது.