குறைந்தபட்ச ஊதியம்: ஏஐடியூசி வலியுறுத்தல்
தின கூலி பணியாளா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
தின கூலி பணியாளா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்து உத்தரவிட வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
ஏஐடியூசி ஈரோடு மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணன் உண்ணியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, தொழிலாளா் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு, அரசு சாா்ந்த துறைகளில் 10,000க்கும் மேற்பட்டோா் தின கூலி பணியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு 2020 - 2021ஆம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
Advertisement
எனவே, மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நடப்பு ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மாவட்ட நிா்வாகம் நிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.