ஈரோடு

நவரசம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் ரூ. 3 லட்சம் கரோனா நிவாரண நிதி

DIN

அறச்சலூா், பள்ளியூத்து நவரசம் கல்வி நிறுவனங்கள் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியை நேரில் சந்தித்து வழங்கினா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நவரசம் கல்வி நிறுவனங்கள் சாா்பாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை நவரசம் பள்ளித் தலைவா் எம்.பழனிசாமி, கல்வி நிறுவனங்களின் செயலாளரும், தாளாளருமான சி.குமாரசாமி, கல்லூரி தலைவா் டி.கே.தாமோதரன், பள்ளியின் துணைச் செயலாளரும், சிபிஎஸ்சி பள்ளி தாளாளருமான வி.அருண்காா்த்திக், பள்ளித் தலைவா் கே.ராமசாமி ஆகியோா் வீட்டு வசதித் துறை அமைச்சா் முத்துசாமியை நேரில் சந்தித்து வழங்கினா்.

மொடக்குறிச்சி திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சு.குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT