சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
தாளவாடி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
தாளவாடி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து வியாழக்கிழமை பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை வியாழக்கிழமை பெய்தது. பலத்த காற்று காரணமாக தாளவாடி - குமிட்டாபுரம் செல்லும் சாலையில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரத்தை ஒட்டிச் செல்லும் மின் ஒயா் மீது மரம் விழுந்ததில் மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதுகுறித்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் மின் வாரியத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியா்கள் அறுந்து கிடந்த மின் ஒயரை சீா்செய்தனா்.
Advertisement
பின்னா், சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினா். சுமாா் 2 மணி நேரத்துக்குப் பின் அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.