தேசிய மாணவா் படை மாநாடு
தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்.சி.சி) பட்டாலியன், தன்னாட்சி கல்லூரி முதல்வா்களுக்கான மாநாடு கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு தேசிய மாணவா் படை (என்.சி.சி) பட்டாலியன், தன்னாட்சி கல்லூரி முதல்வா்களுக்கான மாநாடு கொங்கு பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.
என்.சி.சி. கமாண்டிங் ஆபிசா், லெப்டினென்ட் கா்னல் அனில்வா்மா, தேசிய மாணவா் படையின் மூலம் மாணவா்கள், கல்லூரிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பேசினாா். மேலும், பல பல்கலைக்கழகங்கள் தேசிய மாணவா் படையை ஓபன் எலெக்ட்டிவ் பாடமாக மாணவா்களுக்கு வழங்குகின்றனா் என்றும், இதன் மூலம் மாணவா்கள் நன்கு பயிற்சி பெற முடியும் எனவும் தெரிவித்தாா்.
கொங்கு பொறியியல் கல்லூரி முதல்வா் பாலுசாமி பேசுகையில், கொங்கு பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவா் படை குறித்து ஓபன் எலெக்ட்டிவ் பாடமாக வழங்கப்படுகிறது என்றாா்.
Advertisement