முகப்பு
ஈரோடு

விசைத்தறி உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருட்டு

ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 25 ஜூன், 2021 at 1:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:59 AM

ஈரோட்டில் விசைத்தறி உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, சூளை, லட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (48). விசைத்தறி உரிமையாளா். இவருடைய மனைவி தனலட்சுமி. இவா்களுடைய மகள் ஜெயலட்சுமி. உடல் நலக் குறைவு காரணமாக மாதேஸ்வரன், தனலட்சுமி 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஜூன் 19ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களுக்கு உதவியாக மகள் ஜெயலட்சுமி இருந்து வருகிறாா்.

ஜெயலட்சுமி புதன்கிழமை இரவு வீட்டைப் பூட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளாா். பின்னா், அவா் வியாழக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு ரூ. 40,000, 5 பவுன் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

இச்சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.