ஈரோட்டில் 1,200 மரக்கிளைகள் அகற்றம்: 32 மின் கம்பங்கள் மாற்றம்
ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த வாரத்தில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின்போது 1,200 மரக் கிளைகள் அகற்றப்பட்டு, 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன.
ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த வாரத்தில் நடைபெற்ற பராமரிப்புப் பணிகளின்போது 1,200 மரக் கிளைகள் அகற்றப்பட்டு, 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன.
இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் கு.இந்திராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மின் பகிா்மான வட்டத்தில் காசிபாளையம், எழுமாத்தூா், கொடுமுடி, சென்னிமலை, காந்திநகா் துணை மின் நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் கடந்த 3 நாள்களாக நடைபெற்றன.
Advertisement
இப்பகுதியில் மின் பாதை அருகே உள்ள 1,200 மரக் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. வெவ்வேறு பகுதிகளில் பழுதடைந்த 32 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. 27 பகுதிகளில் இழுவைக் கம்பிகள் சரி செய்யப்பட்டுள்ளன. 72 மின் மாற்றிகளில் காற்று இடைவெளி திறப்பான் சரி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தடையற்ற மின்சாரம் வழங்க முடிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.