மது பாக்கெட்டுகள் கடத்தல்: 4 போ் கைது
காரில் மது பாக்கெட்டுகளை கடத்த முயன்ற 4 பேரை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 370 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
காரில் மது பாக்கெட்டுகளை கடத்த முயன்ற 4 பேரை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 370 மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸாா் வாகனத் தணிகையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடகத்தில் இருந்த வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது, மதுபானங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், காரில் மது வாசனை வீசியதால் சந்தேகமடைந்த போலீஸாா் காரின் அனைத்து பாகங்களையும் சோதனையிட்டனா்.
அப்போது, காரின் கதவுகளைத் திறந்து சோதனையிட்டதில், 380 கா்நாடக மது பாக்கெட்டுகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மது பாக்கெட்டுகள், காரை போலீஸாா் பறிமுதல் செய்து, நம்பியூரைச் சோ்ந்த சீனிவாசன், ஜாபா், ஜலில், கருப்புசாமி ஆகியோரைக் கைது செய்தனா்.
Advertisement