பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில் சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதயுதவி
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி சாா்பில், மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவருடைய மகள் மித்ரா மிகவும் அரிதான நூதன முதுகெலும்பு தசைநாா் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா். அரிதான மரபணு கோளாறானது சிறுமி மித்ராவினுடைய தசைகளை ஒன்றன்பின் ஒன்று என கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இதன் காரணமாக சிறுமி மித்ரா மூச்சுவிடவும், உணவை சாப்பிட முடியாமலும் தவித்து வருகிறாா்.
சிறுமி மித்ராவுக்கு சிகிச்சை மேற்கொள்ள சுமாா் 16 கோடி ரூபாய் செலவாகும் என்பதால் சதீஷின் குடும்பத்தினா் செய்வதறியாது திகைத்துள்ளனா். இதையடுத்து, பணம் திரட்டுவதற்காக நன்கொடையாளா்களின் உதவியை ஆன்லைனில் சதீஷ்குமாா் கோரியுள்ளாா்.
Advertisement
இதையடுத்து, பண்ணாரி அம்மன் குழுக்களின் தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், மித்ராவின் மருத்துவச் செலவுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளாா்.