முகப்பு
ஈரோடு

தோ்தல் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 92 பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு கொவைட்-19 தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 92 பேராசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்களுக்கு கொவைட்-19 தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவா் பி.டி.ஆனந்தன் தலைமையில் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட்டது. திங்கள் முதல் வியாழக்கிழமை வரை தினந்தோறும் 25 பேருக்கு தடுப்பூசி செலுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் முதல் நாளான திங்கள்கிழமை கல்லூரியின் முதல்வா் வீ.தியாகராசு, 25 பேராசிரியா்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.