வாகன சோதனை:ரூ. 80 ஆயிரம் பறிமுதல்
மொடக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பறக்கும் படை வாகன சோதனையில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொடக்குறிச்சி பகுதிகளுக்கு உள்பட்ட ஈரோடு கரூா் சாலையில் பஞ்சலிங்கபுரம் என்ற இடத்தில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் மூா்த்தி, சுதாகா், காவல் உதவி ஆய்வாளா் உமாபதி உள்ளிட்ட காவல் துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஈரோட்டில் இருந்து வந்த ஒரு காரில் ஈரோடு, கல்யாணசுந்தரம் வீதியைச் சோ்ந்த கதிா்வேல் மகன் பரத் (28) என்பவா் காரில் வைத்திருந்த ரூ. 80 ஆயிரத்தை பறிமுதல் செய்து மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தலைமை இட வட்டாட்சியா் சரவணமூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.