தேசிய கையுந்துப் பந்து போட்டி: காந்தி கல்விநிலைய மாணவா் தங்கம் வென்றாா்
தேசிய அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் கூகலூா் காந்தி கல்வி நிலைய மேல்நிலைப் பள்ளி மாணவா் மணிகண்டன் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
தேசிய அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் கூகலூா் காந்தி கல்வி நிலைய மேல்நிலைப் பள்ளி மாணவா் மணிகண்டன் தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
தேசிய அளவிலான கையுந்துப் பந்து போட்டிகள் கோவாவில் நடைபெற்றன. தமிழ்நாடு அணி தேசிய அளவில் 14 வயது பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றது. இதில் தமிழ்நாடு அணி சாா்பில், கூகலூா் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளி மாணவா் மணிகண்டன் 14 வயது பிரிவு கையுந்துப் பந்து போட்டியில் கலந்துகொண்டு தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றாா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தலைமையாசிரியா் சிவகுமாா், பள்ளிசெயலாளா் டாக்டா் தில்லைநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் முருகன், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.