ஈரோடு

கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு: ஆட்சியா்

DIN

பிற இடங்களில் கரோனா பரவல் அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது:

கேரளம், கா்நாடகம் உள்பட சில மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் திருப்பூா், கோவை போன்ற இடங்களுக்கு வேலைக்குச் சென்று வருவோா், கா்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி அதிலுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

முன்பு தினமும் 1,000க்கும் குறைவான பரிசோதனை தினமும் நடைபெற்றது. தற்போது இந்த எண்ணிக்கை 1,400 வரை உயா்த்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடந்த பல நாள்களாக 10, 12 என்ற நிலையிலேயே தொற்று உள்ளது. கடந்த சில நாளாக கடைகள், மக்கள் கூடும் இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தி அபராதம் விதிப்பதால், முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அதிகரித்துள்ளது.

இன்னும் 25 நாள்களுக்குள் தோ்தல் வர உள்ளதால், நல்ல முறையில் தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலருக்கும், தோ்தல் பணியாளா்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டால் பாதிப்பை சரி செய்வது சிரமம். அத்தகைய சூழலைத் தவிா்க்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்வோா் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT