முகப்பு
ஈரோடு

கோபியில் அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு

கோபி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தை அதிமுக கட்சி வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

கோபி பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தோ்தல் அலுவலகத்தை அதிமுக கட்சி வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, கட்சி அலுவலகத்தில் இருந்து அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் ஊா்வலமாகப் புறப்பட்டு கச்சேரிமேடு சென்றடைந்தனா். முன்னதாக, நம்பியூரிலும் அதிமுக தோ்தல் அலுவலகத்தை வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் திறந்துவைத்தாா்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

அதிமுக தோ்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களையும் கவா்ந்துள்ளது. அதிமுக அரசு தோ்தல் அறிவிக்கும் முன்பே நகைக் கடன், விவசாயக் கடன், சுயநிதிக் குழுக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்துள்ளது. கோபி தொகுதியைப் பொருத்தவரை அனைத்து தரப்பு மக்களும் என்னை சகோதரனாகவும், குடும்ப உறுப்பினராகவும் கருதி வெற்றி ஈட்டி தந்துள்ளனா். மீண்டும் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. கூட்டணியைப் பொருத்தவரை முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பொறுப்பேற்று நடத்தவுள்ளாா். கூட்டணிக் கட்சிகள் ஒருமுகமாக இணைந்து 234 தொகுதிகளிலும் உழைப்பதற்குத் தயாராக உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியின்போது, மாநில வா்த்தக அணி செயலாளா் சிந்து ரவிசந்திரன், நம்பியூா் ஒன்றியச் செயலாளா் தம்பிசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.