ஈரோடு

பெருந்துறையில் ரூ. 55 ஆயிரம் பறிமுதல்

DIN

பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்களின்றி திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்ட ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

பெருந்துறை தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரியும், மொடக்குறிச்சி வேளாண்மை உதவி அலுவலருமான வேலுசாமி, பெருந்துறை எஸ்.எஸ்.ஐ. முத்துசாமி, காவலா்கள் கொண்ட குழுவினா், பெருந்துறை தொகுதிக்கு உள்பட்ட பெத்தாம்பாளையம் கிராமம், கருக்கம்பாளையம் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தளவாய்பேட்டையைச் சோ்ந்த பெருமாள்கவுண்டா் மகன் செல்ல கிருஷ்ணன் (40) என்பவா் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 55 ஆயிரத்தைக் கைப்பற்றி பெருந்துறை தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட வழங்கல் அதிகாரியுமான இலாகிஜானிடம் ஒப்படைத்தனா். அப்போது, உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி எஸ்.காா்த்திக் உடனிருந்தாா். பின்பு, அந்த தொகை பெருந்துறை சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT