கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் என்.கே.பிரகாஷ், கட்சித் தொண்டா்களுடன் இரு சக்கர வாகனங்களில் ஊா்வலமாக கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று தோ்தல் நடத்தும் அலுவலரும், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியருமான பழனிதேவியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி ஏற்றுக் கொண்டாா்.