பண்ணாரி அம்மன் கோயிலில் பூச்சாட்டு விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா திங்கள்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கரோனா பரவல் காரணமாக குண்டம் துவக்க விழா எளிமையாக நடைபெற்றது. விழாவையொட்டி, பாரம்பரிய பூசாரிகள் சருகு மாரியம்மன், மாதேஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, கோயிலுக்கு படைக்கலம் எடுத்து வந்தனா். அதைத் தொடா்ந்து கோயிலில் பூ வரம் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து, பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், 10 போ் மட்டுமே கலந்துகொண்டனா். நோய்த் தொற்று காரணமாக பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
கோயிலில் தினந்தோறும் அதிகாலை அம்மனுக்கு ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெறும். மாா்ச் 29ஆம் இரவு குண்டம் விழாவும், 30ஆம் தேதி அதிகாலை பூசாரி மட்டும் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு பக்தா்கள் குண்டம் இறங்க அனுமதியில்லை என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.