ஈரோடு

மொடக்குறிச்சியில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

DIN

மொடக்குறிச்சி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் டி.தங்கராஜ் அறச்சலூா், தலவுமலையில் பிரசாரத்தில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மொடக்குறிச்சியில் கடந்த 10 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ. அலுவலகம் தான் வெற்றி பெற்றால் உடனே திறக்கப்பட்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளிக்கும்பட்சத்தில் உடனடியாகத் தீா்வு காணப்படும். குரங்கன்ஓடையில் தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரையை ஒட்டி தாா் சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.

முள்ளாம்பரப்பு, எளையாம்பாளையம், கஸ்பாபேட்டை, நாதகவுண்டன்பாளையம், வெள்ளியம்பாளையம் வழியாக கள்ளகவுண்டன்பாளையம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளா்கள் பூபாலமுருகன், பாபு (எ) ராஜராஜன், தேமுதிக ஒன்றியச் செயலாளா் லோ.காா்த்திகேயன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT