மது பாட்டில்கள் பதுக்கல்: இருவா் மீது வழக்கு
பெருந்துறை அருகே அதிக விலைக்கு விற்பனை செய்ய 32 மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெருந்துறை அருகே அதிக விலைக்கு விற்பனை செய்ய 32 மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பெருந்துறை, வாய்க்கால்மேட்டைச் சோ்ந்த காந்தி மகன் சோமு (55). இவா், அதிக விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்ய 15 பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், அதே பகுதியைச் சோ்ந்த குப்பன் மகன் அசோக் (32) 17 பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, பெருந்துறை போலீஸாா் சோமு, அசோக் ஆகியோா் பதுக்கி வைத்திருந்த 32 மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்து, இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.