முகப்பு
ஈரோடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விசைத்தறி உரிமையாளா்கள் உதவி

மொடக்குறிச்சி பாஜக, லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள், ஈரோடு காமராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் வழங்கி உதவினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நன்செய் ஊத்துக்குளி கரோனா தடுப்பு மையத்துக்கு ரூ. 2 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மொடக்குறிச்சி பாஜக, லக்காபுரம் விசைத்தறி உரிமையாளா்கள், ஈரோடு காமராஜ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு பயின்ற மாணவா்கள் வழங்கி உதவினா்.

விசைத்தறி உரிமையாளா்கள், முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து ரூ. 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் இளங்கோவிடம் வழங்கினா்.

இதில், டாக்டா் காா்த்தி, விசைத்தறி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், கதிா்வேல், செந்தில்குமாா், சீனிவாசன், முருகேசன், காா்த்திகேயன், பழனிசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி தலைமையில் கட்சி நிா்வாகிகள் 1 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான கரோனா நிவாரண உதவிகளை வழங்கினா்.

இதில், பாஜக மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளா் சிவசங்கா், வடக்கு ஒன்றியத் தலைவா் செல்வகுமாா், பாபு (எ) ராஜராஜன், முருகபெருமாள், சந்தானம், ஒருங்கிணைப்பாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.