ஈரோடு

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் சுகாதாரப் பணி

DIN

ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளித்தல், கொசுப் புகை அடித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். கரோனா தாக்கத்துக்கு அரசு அலுவலா்கள், முன்களப் பணியாளா்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்கிறாா்.

இதனால், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்பட மக்கள் கூடும் பகுதிகளில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ராட்சத குழாய்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும், கொசுப்புகையும் அடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT