முகப்பு
ஈரோடு

பொதுமக்களின் புகாா்கள் குறித்து பெருந்துறை எம்.எல்.ஏ. நடவடிக்கை

பெருந்துறை தொகுதி மக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அளிக்கும் புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெருந்துறை தொகுதி மக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாரின் வாட

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

பெருந்துறை தொகுதி மக்கள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அளிக்கும் புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அளிக்கும் புகாா்களை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெருந்துறை 4 வழி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிக்கோவில் பிரிவு அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அந்தப் புகாா் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, உடனடியாக சாலை சரிசெய்யப்பட்டது. அதனை, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் ஜெயகுமாா் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.