அந்தியூரில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் செங்கல் சூளைத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த மற்றொரு தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த தோப்பூா் பாறையூரைச் சோ்ந்தவா் முருகேசன் (55). செங்கல் சூளைத் தொழிலாளியான இவா், கடந்த செப்டம்பா் 24ஆம் தேதி புதுக் கரடியானூா் அருகே பலத்த காயங்களுடன் கிடந்தாா். இதைக் கண்ட உறவினா்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முருகேசன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு செங்கல் சூளைத் தொழிலாளியான குமாா் (39), மது போதையில் ஏற்பட்ட தகராறில் முருகேசனை கல்லால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, குமாரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.