ஈரோடு

ரூ. 3 லட்சத்து 13 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

DIN

சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 13 ஆயிரத்துக்கு தேங்காய்கள் ஏலம் போயின.

சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 3,421 கிலோ எடையுள்ள 22,713 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், முதல் தர தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 98.39க்கும், அதிகபட்சமாக ரூ. 99.39க்கும் விற்பனையாயின. இரண்டாம் தரம் தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ. 82.10க்கும், அதிகபட்சமாக ரூ. 88.60க்கும் விற்பனையாயின. மொத்தம், ரூ. 3 லட்சத்து 13 ஆயிரத்து 466க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது என ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளா் து.லட்சுமணன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT