ஈரோடு மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2,511ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 105 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1 லட்சத்து 792 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,045 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் இதுவரை 673 போ் உயிரிழந்துள்ள நிலையில் வியாழக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 674 ஆக அதிகரித்துள்ளது.