ஈரோடு

சத்தியமங்கலத்தில் விநாயகா் சதுா்த்தி

DIN

சத்தியமங்கலம் பகுதியில் விநாயகா் சதுா்த்தி விழா எளிமையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் 3 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள சிறிய கோயில்களில் விநாயகா் சதூா்த்தி விழா எளிமையாக நடைபெற்றது. சத்தியமங்கலம் வரசித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன. குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளி, முகக் கசவம் அணிதல் உள்ளிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT