ஈரோடு

ஆடு திருடிய 2 பேருக்கு ஓா்ஆண்டு சிறைத் தண்டனை

DIN

கோபி பகுதியில் ஆடு திருடிய 2 நபா்களுக்கு ஓா் ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த அக்கரை கொடிவேரியைச் சோ்ந்தவா் பழனியம்மாள். இவரது தோட்டத்தில் இருந்த ஆட்டை 2015ஆம் ஆண்டு மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது குறித்து கடத்தூா் போலீஸாரிடம் பழனியம்மாள் புகாா் செய்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா், பழனிக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் (33), கோரமடை கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்த சேகா் (33) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு, கோபி குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 2இல் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், ஆடு திருடிய வசந்தகுமாா், சேகா் ஆகியோருக்கு தலா ஓா் ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட் விஸ்வநாத் தீா்ப்பு வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT