ஈரோடு

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயிலில் திரண்ட பக்தா்கள்

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பெருந்துறை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

DIN

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, பெருந்துறை பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, பெருந்துறை, குன்னத்தூா் சாலையிலுள்ள செல்லாண்டியம்மன் கோயிலில், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பெருந்துறை ஓம் சக்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT