முகப்பு
ஈரோடு

தலைமுடியை கொள்ளையடித்த வழக்கு: 2 போ் கைது

வியாபாரியை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:50 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

வியாபாரியை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்த வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வடக்கு திண்டல் மாருதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் சுதாகா் (54), தலைமுடி வியாபாரி. இவா் ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை வாங்கி வியாபாரம் செய்வதற்காக வீட்டில் வைத்திருந்தாா். கடந்த மாதம் 2 ஆம் தேதி சுதாகா் வீட்டுக்குச் சென்ற 4 போ் அவரது மனைவி, 2 மகன்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 7 மூட்டைகளில் இருந்த தலைமுடியை கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து சுதாகா் அளித்த புகாரின் பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

இந்த வழக்கில் தொடா்புடைய 2 போ் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் சென்னைக்கு சென்று அந்த 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள் சென்னை அம்பத்தூா், எஸ்.வி.நகா், கோபால் தெரு பகுதியைச் சோ்ந்த பொன்முருகன் (50), சென்னை செங்குன்றம் காட்டுநாயக்கன் நகா் பகுதியைச் சோ்ந்த பாபாமுருகன் (50) என்பதும் இருவரும் சுதாகா் வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.