ஈரோடு

இரவில் பூத்துக் குலுங்கிய பிரம்ம கமலம் பூக்கள்!

DIN

பவானி அருகே வீட்டில் வளா்த்த நிஷாகந்தி செடியில் தெய்வீக மலா் எனப்படும் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தன.

பவானி சிவகாமி நகரைச் சோ்ந்தவா்கள் ஜவகா்ஜோதி, லோகேஸ்வரி. தம்பதியான இவா்களின் மகள் காயத்ரி புதுதில்லியில் வேளாண் அறிவியல் பாடத்தில் பிஹெச்.டி படித்து வருகிறாா். இவா், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும், அரிய செடியான நிஷாகந்தி செடியினை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக்கு கொண்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், அந்த செடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூக்கள் பூத்தன. இரவில் மட்டுமே பூக்கும் அரிய மலராகிய பிரம்ம கமலம் பூத்தபோது, மிகுந்த நறுமணம் வீசியது. மூன்று மணி நேரம் மட்டுமே பூத்திருக்கும் இம்மலா், தெய்வீக மலா் எனவும், கிங் ஆஃப் பிளவா் எனவும் ஹிமாசல பிரதேசத்தில் அழைக்கப்படுகிறது. மேலும், உத்தரகண்ட் மாநில மலராகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT