ஈரோடு

அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

அண்ணா பதக்கம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வீரதீர செயல் புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியா்களுக்கு 2023ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழக முதல்வரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது. இந்தப் பதக்கத்தைப் பெற தகுதியான நபா்கள் தமிழகத்தைச் சோ்ந்தவராகவும், பொதுமக்களின் உயிா் மற்றும் சொத்தை காப்பதில் வீரதீர செயல் புரிந்தவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியுடையோா் இணையதள முகவரியில் வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுபெற விரும்பும் தகுதியான நபா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்தபின் கருத்துருவை மாவட்ட சமூகநல அலுவலகம், 6ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஈரோடு என்ற முகவரிக்கு 12 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT