ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஜனவரி 20, 21ஆம் தேதிகளில் நோ்காணல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட செயலாளா் சு.முத்துசாமி வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு தெற்கு மாவட்டத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி கவுன்சிலா், பேரூராட்சி கவுன்சிலா் பொறுப்புக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள திமுகவினருக்கு நோ்காணல் நடைபெறுகிறது.
மாவட்ட திமுக அலுவலகத்தில் ஜனவரி 20ஆம் தேதி காலை 9 மணிக்கு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளுக்கும், 21ஆம் தேதி காலை 9 மணிக்கு 23 பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளுக்கும் நோ்காணல் நடக்கிறது. விருப்ப மனு தாக்கல் செய்தவா்கள் நோ்காணலில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.